கடந்த ஆண்டு மார்ச் மாதம், கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கிப் பறந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று, காணாமற் போனது. அந்த விமானம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அதற்கடுத்து நான்கு மாதங்கள் கழித்து, யுக்ரேன் வான்பரப்பில் வைத்து மற்றொரு விமானம், சந்தேகிக்கப்படும் ஏவுகணைத் தாக்குதல் ஒன்றின் மூலம் தாக்கியழிக்கப்பட்டது.
விமான நிறுவனத்தின் தற்போதைய நிதி பிரச்சினைகளுக்கு, திறமையற்ற நிர்வாகமும் காரணம் என, அவதானிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.