இந்தச் சட்டத்தில் உள்ள சரத்துக்களின்படி, இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட முடியாது என்பதை வலியுறுத்துகின்றது. இதனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இனிவரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.
மேலும், அந்த 19ஆவது சீர்திருத்த சட்டத்த்தின்படி இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஏனெனில், கோத்தபய ராஜபக்சே அமெரிக்க மற்றும் இலங்கை நாட்டுக் குடியுரிமைகளைக் கொண்டிருக்கிறார். எனவே அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யாமல் கோத்தபய ராஜபக்சே தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை தோன்றியுள்ளது.