பசிபிக் கடல் பகுதி அருகில் உள்ள சாலமன் தீவில் இன்று அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அனைத்தும் குலுங்கின. மேலும் கிழக்கு கீரா கீரா பகுதியிலிருந்து 224 கி.மீட்டர் தொலைவில் 37 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்துடன் காணப்படுகின்றன.