விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க அமெரிக்கா மறுப்பு

வெள்ளி, 3 ஜூன் 2016 (17:48 IST)
விடுதலைப் புலிகளின் மீதான தடையை அமெரிக்கா மீண்டும் நீடித்துள்ளது.
 

 
இலங்கையில், அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே கடந்த 2009 ஆம் ஆண்டு போர் நிறைவு பெற்றது. மேலும், இலங்கையில் எந்த விதமான போர் முறைகளில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவில்லை.
 
ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு, இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த வழக்கில் 13 விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.
 
மேலும், 2015 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் மலேசியாவில் புலிகள் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.
 
அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்பு உலகம் முழுக்க உள்ள ஈழ விடுதலைப்புலி ஆதரவாளர்களை பெரும் கவலை கொள்ளவைத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்