சுமர் 28 வருடங்கள் ஒற்றுமையாக குடும்பம் நடத்திய இந்த தம்பதிகள் தற்போது கருத்துவேறுபாடு காரணமாக பிரிய முடிவெடுத்தனர். இவர்களது விவாகரத்து வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்றபோது, இவரது மனைவி தரப்பு தனது கணவருக்கு சுமார் 8 ஆயிரம் கோடிக்கு சொத்துகள் இருப்பதாகவும், அதில் தனக்கும் சமபாதி உரிமை இருப்பதால் குழந்தைகளின் நலன் கருதி அதில் பாதி பங்கை வழங்க வேண்டும் என்றும் வாதாடியது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி தொழிலதிபரின் மனைவி சொகுசாக வாழ ரூ.3,750 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த தொகை அந்த தொழில் அதிபரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 41.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.