துருக்கியில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி

சனி, 10 அக்டோபர் 2015 (14:44 IST)
துருக்கி தலைநகர் அன்காராவில் இன்று நடைபெற்ற அமைதிப் பேரணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.


 

தென்கிழக்கு துருக்கியில் ஆட்சியாளர்களுக்கும் குர்திஷ் படையினருக்கும் இடையில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இன்று காலை தலைநகர் அன்காராவில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதையடுத்து துருக்கி நேரப்படி இன்று காலை 10 மணிக்கு பேரணி நடந்த இடம் அருகே அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் பலரது உடல்கள் சிதறி கிடந்தன. சாலை முழுவதும் மனித ரத்தம் சிதறி ஓடியது. இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்