பாகிஸ்தானின் லாகூர் நகரில் பூங்கா ஒன்றில் தற்கொலைப்படையினர் திடீர் தாக்கல் நடத்தினர். இந்த தாக்குதலில், பொது மக்கள் சுமார் 64 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சுமார் 100 பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, இநதியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பதவில், லாகூரில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கோரசம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.