கடவுளை அவமதித்த இளம்பெண்ணை தூக்கிலிட வலியுறுத்தி போராட்டம்

வெள்ளி, 14 அக்டோபர் 2016 (18:14 IST)
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் கடவுளை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசியா பிபி என்ற இளம்பெண்ணை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.


 

 
பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஆசியா பிபி என்ற இளம்பெண், அந்நாட்டின் பெரும்பான்மை மதக்கடவுளை தவறாகச் சித்தரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை விசாரிக்கப் போவதில்லை என நீதிபதி ஒருவர் அறிவித்ததால், அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நாட்டின் தலைநகரம் இஸ்லாமாபாத் பகுதியில் ஆசியா பிபியை உடனடியாக தூக்கிலிட வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். 

வெப்துனியாவைப் படிக்கவும்