கடந்த வெள்ளிக்கிழமை, சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு ராணுவப் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் தென்கொரியாவும், அமெரிக்காவும் வட கொரியாவின் எதிர்ப்பையும் மீறி ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வட கொரிய அரசுச் செய்தி நிறுவனம் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், போருக்கு தயாராகும்படி ராணுவத்திற்கு அறிவித்துள்ளதாகவும், இன்று காலை வட கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், 2 குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள வட கொரிய அரசுச் செய்தி நிறுவனம், ”பிளவுபட்ட கொரியாவை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான போரைத் தொடங்குவதற்கு காலம் நெருங்கிவிட்டது. அந்தப் போருக்காக கொரிய ராணுவம் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.