தனது பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் வரையில், நாட்டில் திருமண நிகழ்ச்சிகள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றை நிறுத்தி வைக்கும்படி வடகொரிய அதிபர் கிம் ஜா ங் உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில், நீருக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து தாக்கும் சக்தி படைத்த அதிநவீன ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. மேலும், உலக நாடுகளின் பொருளாதாரா தடையை மீறி 5ஆவது அணுகுண்டு சோதனையை நடத்த அந்நாடு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சியின் பாதுகாப்புகருதி, தான் பதவியேற்கும் வரை நாட்டில் திருமண நிகழ்ச்சிகள், இறுதிச் சடங்குகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது என கிம் ஜாங் தனதுநாட்டு மக்களுக்கு உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.