மெல்போனில் உள்ள ஒரு கங்காரு காப்பகத்தின் பராமரிப்பாளர் வேறு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அங்கிருக்கும் ஒரு கங்காரு அவரைப் போக விடவில்லை. போக வேண்டாம் என்று கெஞ்சுவது போல், அவரின் காலைப் பிடித்துக் கொண்டு, அவரை போகவிடாமல் தடுக்க முயற்சி செய்து கொண்டே இருந்தது.
பொதுவாக, மனித இனத்தில்தான் குழந்தைகள் இப்படி செய்வார்கள். இங்கே கங்காருவும் அதையே செய்கிறது. இதிலிருந்து அன்பு, பாசம் எல்லாம் விலங்குகளுக்கும் ஒன்றுதான் என்று, அந்த கங்காருவின் செயல் நமக்கு உணர்த்துகிறது.