பாரீஸ் சென்ற அமெரிக்க மாடல் அழகியை கட்டி வைத்து நகை கொள்ளை

திங்கள், 3 அக்டோபர் 2016 (16:25 IST)
பாரிஸ் நாட்டிற்கு சென்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி பிரபலமும், மாடலுமான கிம் கர்தாஷியனை துப்பாக்கி முனையில் மிரட்டி பல லட்சம் மதிப்புடைய நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற விவகாரம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 

 
கிம் கர்தாஷியன்(35), தொலைக்காட்சி தொகுப்பாளியான இருந்து பின் மாடலாக மாறினார். இவர் அமெரிக்காவின் பிரபல ராப் இசைக் கலைஞரான கென்யா வெஸ்டின் என்பரின் மனைவி ஆவார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

அவ்வப்போது, தனது நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவதுண்டு.
 
இவர், ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரீஸ் சென்றிருந்தார். அங்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அவருடன் அவருடைய சகோதரி மற்றும் அவரின் தாய் ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது.
 
அவர் அறையில் இருந்த போது, மர்ம நபர்கள் 5 பேர் திடீரென அவரின் அறைக்குள் நுழைந்தனர். அதில் இருவர் போலீஸ் உடையில் இருந்ததாக கூறப்படுகிறது.
 
அவர்களை, அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி, குளியல் அறையில் கைகளை கட்டி அடைத்து வைத்ததாக தெரிகிறது. அதன்பின் அவர்கள், அந்த அறையிலிருந்த பல லட்சம்  மதிப்புடைய வைர நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்