வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்தாலும், டிக்கெட்டின் விலை லட்சக்கணக்கில் இருப்பதால் நடுத்தர மக்கள் கூட, விமானப் பயணம் மேற்கொள்ள தயங்குவதுண்டு. தற்போது அதை சுலபமாக்கியுள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.
அதற்கு உங்களிடம் இருக்க வேண்டியது ஒரு கிரெடிட் கார்டு மட்டும்தான். ஹெச்.எஸ்.பிசி, கோடக் மகிந்திரா, ஆக்சிஸ், ஸ்டாண்டார்ட் சார்டட் இண்டஸிண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ ஆகிய 6 வங்கிகளில் ஏதேனும் ஒன்றின் கிரெடிட் கார்டை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.
விமானப் பயணம் மேற்கொள்ளும் போது, அந்த கார்டை பயன்படுத்தி நீங்கள் டிக்கெட் புக் செய்து, மொத்த விலையை மாத தவனையாக மாற்றிக்கொள்ளலாம், 3,6, 9 முதல் 12 மாதங்கள வரை உங்களுக்கு தவனை கிடைக்கும்.