இந்நிலையில் பிரபல நடிகரான ஜாக்கி சானின் மகன் ஜெய்சி சானையும், அவருடைய நண்பரான கய் கோவையும் சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்ததாகவும், போதை பொருள் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டதாகவும் சீன போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களை பரிசோதித்து பார்க்கையில் அவர்கள் இருவரும் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது எனவும், அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்கள் நிரூபிக்கப்பட்டால் ஜாக்கி சானின் மகனுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.