அந்த வகையில் இன்று 300 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியது. இதில், 20 பேர் இறந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் இந்த உக்கிரமான தாக்குதல்களில் இதுவரை 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.