ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் இந்திய பெண்களை செக்ஸ் அடிமைகளாக நடத்துகிறார்கள் - விசாரணையில் அதிர்ச்சி

சனி, 23 மே 2015 (20:14 IST)
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்திய பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவதாக அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து இந்தியா திரும்பியுள்ள அரிப் மஜீத் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு மே மாதம் மும்பையின் கல்யாண் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள், சுற்றுலா செல்வதாக வீட்டில் கூறிவிட்டு ஈராக் சென்று ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துவிட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனோ, வேறு யாருடனோ தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை.
 

 
இந்நிலையில் இந்த இயக்கத்திலிருந்து திரும்பி வந்துள்ள அரிப் மஜீத்திடம் இந்திய விசாரணை ஏஜென்சி (என்ஐஏ) விசாரணை நடத்தினர். பின்னர் விசாரனை ஏஜென்ஸி 8 ஆயிரம் பக்க, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
 
அந்த குற்றப்பத்திரிகையில், “ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தங்கள் தலைவன் அல் பாக்தாதியை, இறைதூதர் என்று கூறியிருந்தது. ஆனால், உண்மையில் அப்படி எதுவும் கிடையாது. உண்மையான இறைதூதராக இருந்திருந்தால் கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபட்டிருக்க மாட்டார். அங்கு, ரத்த வெறியில் வேட்டை நடக்கிறதே தவிர போர் நடக்கவில்லை.
 
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அவர்கள் ஒரு உடமைகளைப் போலதான் பார்க்கப்படுகிறார்கள், உயிருள்ள மனுஷிகளாக மதிக்கப்படுவதில்லை. இறைதூதராக இருந்திருந்தால் பெண்களை இப்படி நடத்தியிருக்க மாட்டார். இந்தியாவிலிருந்த சென்ற பெண்களும், ஆண்களும் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்