கடந்த ஆண்டு மே மாதம் மும்பையின் கல்யாண் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள், சுற்றுலா செல்வதாக வீட்டில் கூறிவிட்டு ஈராக் சென்று ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துவிட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனோ, வேறு யாருடனோ தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை.
அந்த குற்றப்பத்திரிகையில், “ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தங்கள் தலைவன் அல் பாக்தாதியை, இறைதூதர் என்று கூறியிருந்தது. ஆனால், உண்மையில் அப்படி எதுவும் கிடையாது. உண்மையான இறைதூதராக இருந்திருந்தால் கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபட்டிருக்க மாட்டார். அங்கு, ரத்த வெறியில் வேட்டை நடக்கிறதே தவிர போர் நடக்கவில்லை.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அவர்கள் ஒரு உடமைகளைப் போலதான் பார்க்கப்படுகிறார்கள், உயிருள்ள மனுஷிகளாக மதிக்கப்படுவதில்லை. இறைதூதராக இருந்திருந்தால் பெண்களை இப்படி நடத்தியிருக்க மாட்டார். இந்தியாவிலிருந்த சென்ற பெண்களும், ஆண்களும் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.