மேலும் இது குறித்து சீனா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் செயல்படும், தீவிரவாத அமைப்புகள், நிச்சயமாக ஈவு இரக்கமின்றி, தயவுதாட்சனை இன்றி ஒழிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “தீவிரவாதம் அனைத்து விதமான மனித நடவடிக்கைகளுக்கும் எதிரானது. அனைத்து விதமான தீவிரவாத சிந்தனைகளையும் சீனா உறுதியாக எதிர்கிறது. மனித தன்மையை நிறுவும் பொருட்டு, எடுக்கப்படும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க சீனா தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.