கட்டடத்திலிருந்து தூக்கி வீசி மரண தண்டனை கொடுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள்

சனி, 28 பிப்ரவரி 2015 (15:45 IST)
சிரியாவின் பெரும் பகுதியை ஆக்ரமித்துள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஒருவரை கட்டடத்தில் இருந்து தூக்கி வீசி மரண தண்டனையை நிறைவேற்றியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஷரியா நீதிமன்றத்தில் ஓரினச் சேர்க்கையாளர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவரது கை, கால்கள் கட்டப்பட்டு மாடியின் மீது படுக்க வைக்கப்பட்டார்.
 
கீழே ஏராளமானோர் திரண்டு நிற்கிறார்கள். ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த மனிதரை மாடியில் இருந்து கீழே வீச, தரையில் விழுந்த அந்த நபர் மீது அங்கே கூடியிருந்த மக்கள் கற்களை வீசுகின்றன. எந்த சலனமும் இல்லாமல் அந்த உடல் கிடக்கிறது.
 
இந்த புகைப்படங்களை ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இதே போல ஏற்கனவே ஒருவருக்கு கடந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்