ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இருந்து விலக அறிவுரை சொன்ன தாயை பெற்ற மகனே சுட்டுக்கொன்ற கொடூர சம்பவம் சிரியாவில் நிகழ்ந்துள்ளது.
சிரியாவில் ராக்காவில் உள்ள பகுதியில் பணியாற்றி வருபவர் லீனா. ராக்கா பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கியமான பகுதி. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிலிருந்து விலகுமாறு தனது மகன் அலி சாக்கருக்கு லீனா அறிவுரை வழங்கியுள்ளார்.