பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பமடைந்து வருவது குறித்து உலக நாடுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கவலை தெரிவித்து வருகின்றன. ஆனால், இது தொடர்பாக நாடுகளுக்கிடையே எந்த முடிவையும் எட்டும் நிலை இதுவரை உருவாகவில்லை.
இந்நிலையில், பிரான்சில் கடந்த பத்து நாட்களாக நடந்த மாநாட்டில், உலக நாடுகள் அனைத்துக்கும் ஏற்று கொள்ளும் வகையில் கொள்கை முடிவுகள் எட்டப்பட்டது. இதற்கான வரைவு அறிக்கையை, மாநாட்டின் தலைவரும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சருமான லாரென்ட் ஃபேபியஸ் மாநாட்டில் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம், உலக சுற்றுச்சூழலைக் காப்பதில் முக்கிய நடவடிக்கைகள் இனி வரும் காலங்களில் எடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.