மலாலா யூசுப்சாய் கடந்த 2012ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார். தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலா 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர். இதன் மூலம், உலகிலேயே முதன் முறையாக மிக இளம் வயதிலேயே நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை பெற்றார்.
கட்டாயமாக கல்வி வழங்கப் பட வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி வரும் அவரின் முழக்கத்தை பரப்புவதாகவும், அதே நேரத்தில், ஒரு சாதாரண சிறுமியாக தனது தம்பிகளுடன், சண்டையிடும் அக்காவாகவும் இந்த ஆவணப்படத்தில் தோன்றியுள்ளார் மலாலா.