சிங்கப்பூரில் இந்திய இளைஞர் படுகொலை

திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (14:44 IST)
சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் அவரது பணியிடத்திற்கு அருகே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சிங்கப்பூரின் பந்தான் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று உடலில் காயங்களுடன் சுரேஷ் குமார் என்னும் 26 வயது இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.  
 
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ், இளைஞர் விழுந்திருந்த இடத்தில் ரத்த கறை படிந்திருந்ததாகவும், அவரது தலை, கழுத்து மற்றும் இடது கையில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
 
மேலும், கொலை செய்யப்பட்ட சுரேஷிடமிருந்து எந்த பொருளும் திருடப்படவில்லை எனவும், இதனால் இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவைச் சேர்ந்த சுரேஷ் 2009 முதல் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் அவரது மேலதிகாரி அவரை  நேர்மையானவர்,  கடுமையான உழைக்க கூடியவர் என பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்