இந்திய மீனவர்கள் 59 பேரை கைது செய்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர்

வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (15:02 IST)
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 59 பேர் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.


 

 
இந்திய மீனவர்கள் 59 பேர் அரபிக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
 
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அனைவரும் கராச்சி  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 
அத்துடன், இவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்