வேலைக்கார பெண்ணை நாயுடன் படுக்க வைத்தவரிடம் விசாரணை

புதன், 7 செப்டம்பர் 2016 (15:39 IST)
அமெரிக்காவில் வேலைக்காரப் பெண்ணை நாய்களுடன் படுக்க வைத்து கொடுமை படுத்தியதாகா புகார் வந்ததையடுத்து அந்த பெண்ணின் ஓனரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 
 
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிமன்ஸ் பாட்டியா என்பவர் அமெரிக்காவில் உள்ள ரோஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஐடி ஸ்டாப்பிங் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.
 
இவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் இவர் மீது, அமெரிக்க தொழிலாளர் நலத்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஹிமன்ஸ் பாட்டியா கூடுதல் நேரம் வேலை வாங்கியதாகவும், போதிய சம்பளம் கொடுக்க வில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
 
மேலும் அவரது வீட்டு நாய்களுடன் தன்னை படுக்கச் சொன்னார் என்றும் அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து வேலைக்கார பெண்ணின் புகார் குறித்து உயர் அதிகாரிகள் ஹிமன்ஸ் பாட்டியாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்