கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சேவும், மைத்ரிபால சிறிசேனாவும் போட்டியிட்டனர். இதில், மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை 3 லட்சத்து 24 ஆயிரத்து 063 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள மகிந்த ராஜபக்சே, “நாட்டில் முப்பது வருடங்களாக நிலவி வந்த கொடிய யுத்தத்தை முடித்து, நாட்டை ஐக்கியப்படுத்தி, இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தியதால்தான் எனக்கு எதிராக மக்கள் வாக்களித்து என்னை தோற்கடித்துள்ளனர்.