பிணத்திலிருந்து பரவும் எபோலோ குறித்து சியாரா லியோன் மருத்துவர், நான் இறந்தால், மரணம் என்னோடு முடிய வேண்டும் என்று வானொலியில் உரை நிகழ்த்தியுள்ளார்.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டாக்டர் டெஸ்மாண்ட் வில்லியம்ஸின் பேச்சு வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய வில்லியம்ஸ், “நான் இறந்தால், மரணம் என்னோடு முடிய வேண்டும். நான் இறக்கும் போது என் உடலை என் குடும்பத்தினர் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான, மருத்துவ அடக்கம் செய்ய வேண்டும்” என்று அவர் தனது வானொலி உரையில் குறிப்பிட்டுள்ளார்.