இதற்கு முன்பாக 'ஐபிஎம்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, உலகம் முழுவதிலும் உள்ள ஊழியர்களில் 1,11,000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக பத்திரிக்கைகள் தகவல்கள் வெளியிட்டன. இது கார்ப்பரேட் வரலாற்றில் இது மிகவும் மோசமான நடவடிக்கை என்று ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன.
இது குறித்து அந்நிறுவன அதிகாரி குறிப்பிடுகையில், “ஐபிஎம் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக வந்திருக்கும் தகவல்கள் வெறும் வதந்திகளே. இது நகைப்பிற்குறியது. வதந்திகளுக்கு எந்த பதிலும் சொல்ல முடியாது” என்று கூறியுள்ளது.