ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, அக்குழு ஆணையர் வெளியிட்ட அறிக்கை மீதுதான் நான் பேசினேன். ஒருபோதும், அமெரிக்க தீர்மானத்தின் மீது நான் பேசவில்லை.
ஐ.நா. மனித உரிமை குழு, ஆண்டு கூட்டத்துக்கு செல்கிறேன் என நான் அறிவித்த போது, அங்கு இதை பேசுங்கள் என அப்போதே தெரிவித்து இருக்கலாம். எனக்கு அளிக்கப்பட்ட இரண்டு நிமிட அவகாசத்தில், எதைப் பேச வேண்டுமோ, அதை மிகஅழுத்த பதிவு செய்துள்ளேன்.