பணிப்பெண்ணுடன் கணவன்: மனைவியிடம் மாட்டி விட்ட கிளி

வியாழன், 27 அக்டோபர் 2016 (13:48 IST)
குவைத்தில் கணவன் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணுடன் ஆசையாக பேசிக் கொண்டிருந்ததை, மனைவியிடம் போட்டுக் கொடுத்த கிளி.


 

 
குவைத்தில் கிளி ஒன்று, கணவன் வீட்டில் பணிபுரியும் பெண்ணுடன் ஆசையாக வார்த்தைகள் கொண்டு பேசிக் கொண்டிருந்ததை மனைவிடம் அப்படியே கூறியது.
 
இதனால் அந்த பெண் தனது கிளியுடன் சென்று காவல்துறையினரிடம் புகார் அளித்தார். கிளியை சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், கிளி தொலைக்காட்சி மற்றும் ரேடியோ போன்றவற்றில் கேட்பவையெல்லாம் பேசும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
இதனால் கணவன் பிழைத்தார். குவைத்தில் கள்ளத்தொடர்பு சட்டத்துக்கு விரோதமானது. இதில் சிக்குபவர்கள் தண்டிக்கப்படுவதோடு, அடிமையாக நடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்