அதனையடுத்து அருகில் வேறு இடத்தில் நிலத்தைத் தோண்டியபோது, அங்கேயும் மனித எலும்புகள் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடுத்தடுத்து நான்கு இடங்களில், தோண்டிய இடங்களில் எல்லாம், மனித எலும்புகள் காணப்பட்டதையடுத்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கேள்வியுற்ற இலங்கை எம்.பி.க்கள் சிறிதரன், மாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு இந்தப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது, பலர் காணாமல் போயிருந்ததாகவும், அவ்வாறு காணாமல் போனவர்களுக்கும் இந்த புதைகுழிகளுக்கும் தொடர்பிருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.