ஈரான் போர் தொடர்ந்தால் பெட்ரோல், டீசல், கேஸ் மட்டுமில்லை.. இந்தியாவில் இண்டர்நெட்டுக்கும் சிக்கல்?

Siva

வியாழன், 2 ஏப்ரல் 2026 (13:05 IST)
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டை தாண்டி, இந்தியாவின் இணைய சேவையும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. 
 
உலகளாவிய இணைய போக்குவரத்தில் 99 சதவீதம் கடலுக்கு அடியில் உள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமே நடைபெறுகிறது. குறிப்பாக, இந்தியாவின் மொத்த இணைய போக்குவரத்தில் 60 சதவீதம் மும்பையிலிருந்து வளைகுடா மற்றும் செங்கடல் வழியாகவே ஐரோப்பாவிற்கு செல்கிறது.
 
இந்த முக்கியமான வழித்தடத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அது இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் உள்ள கேபிள்களை துண்டிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. 
 
இவ்வாறு கேபிள்கள் பாதிக்கப்பட்டால் இணையம் முற்றிலும் முடங்காது என்றாலும், தரவு போக்குவரத்து மாற்று வழிகளில் திருப்பி விடப்படும்போது வேகம் வெகுவாக குறையும். இது சர்வதேச பணப்பரிமாற்றங்கள், ஆன்லைன் சேவைகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் செயல்பாடுகளில் பெரும் தாமதத்தை ஏற்படுத்தும். 
 
போர் நீடித்தால், இந்த 'நெட்வொர்க் நெரிசல்' பொதுமக்களின் அன்றாட டிஜிட்டல் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்