அரசு பங்களாவில் கள்ளக்காதலியோடு கூத்தடித்த கவர்னர்!!

வியாழன், 13 ஏப்ரல் 2017 (11:01 IST)
கள்ளக்காதலியோடு அரசு வழங்கிய பங்களாவில் கூத்தடித்தது மற்றும் தேர்தல் செலவுக் கணக்கு முறையாகக் காட்டாத காரணத்தால் கவர்னருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
 
அலபாமா மாநில கவர்னர் ராபர்ட் பென்ட்லி. இவர் கவர்னர் பங்களாவில் கள்ளக் காதலியுடன் கூத்தடித்து உள்ளார். இவருடைய இந்த கள்ளக்காதல் விவகாரம் வெளியே வராமல் தடுப்பதற்காக, அரசு அதிகாரிகள் மூலம் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளார். 
 
அரசுப் பணியாளர்களை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை மாண்ட்கோமரி கவுண்டி ஜெயிலில் அடைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜெயில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டவுடன் தானாக முன்வந்து பதவி விலகியுள்ளார் ராபர்ட் பென்ட்லி.

வெப்துனியாவைப் படிக்கவும்