ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டாஸ்மானியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே உள்ள கிங் தீவுகளை சுற்றிப் பார்ப்பதற்காக, 5 பேரை ஏற்றிக்கொண்டு, சிறு ரக விமானம் ஒன்று எஸ்ஸன்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம், அருகாமையில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் பாய்ந்தது.
மேலும், வணிக வளாகத்திற்குள் இருந்த ஆட்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.