சிறையில் தீ விபத்து: 17 பேர் பலி, 11 பேர் படுகாயம்

செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (11:19 IST)
வெனிசுலா நாட்டின் ஒரு நெரிசல் நிறைந்த சிறையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது இதில் 17 பேர் இறந்துள்ளனர் 11 பேர் காயமடைந்துள்ளனர் என வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிறையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் அளவுக்கு அதிகமான சிறைக்கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர். 900 கைதிகளுக்காக கட்டப்பட்ட இந்த சிறையில் இரு மடங்கு அதிகமான கைதிகள் உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீவிபத்தில் சிறைக் கைதிகள் மற்றும் பார்வையாளர்களும் பலியாகினர் என சிறைத்துறை அறிக்கை கூறுகின்றது. சிறை அமைச்சகம் உடனடியாக இந்த தீவிபத்து குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அளவுக்கு அதிகமான கைதிகள் இங்கு உள்ளதால் நவம்பரில் நடந்த ஒரு சிறை கலவரத்தில் 35 கைதிகள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்