யாழ்ப்பாணம் வடமராட்சியில் அமைந்துள்ள பிரபல கல்லூரி ஒன்றான நெல்லியடி மத்திய கல்லூரியில் சுவாரஸ்யமான சம்பவமொன்று அண்மையில் நடந்துள்ளது. இரண்டாம் சமஸ்டருக்கான வகுப்புகள் ஆரம்பித்த சமயத்தில், கல்லூரியிலிருந்து பல பெற்றோர்களிற்கு கடிதம் சென்றுள்ளது.
ஆனால் மானவிகளின் பெற்றோர்களுக்கு கல்லூரி முதல்வர் தெரிவித்தாவது, அண்மையில் பாடசாலையில் நடந்த நிகழ்வொன்றில் ராணுவத்தினர் வான வேடிக்கைகளை காட்டியதாகவும் இந்த நிகழ்வுக்கு கல்லூரி மாணவிகள் பலர், தங்களது தலை முடிகளை அவிழ்த்து விட்டு வந்ததாக கூறியுள்ளார்.
மேலும், இராணுவத்தினருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்ததாகவும், இதற்காகவே அவர்களை அழைத்து எச்சரித்ததாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். விஷயத்தை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் முனுமுனுத்தபடி சென்றனர்.