நாய் குட்டியை காட்ட மறுத்ததால் 8 வயது சிறுமியை சுட்டுகொன்ற 11 வயது சிறுவன்

புதன், 7 அக்டோபர் 2015 (12:36 IST)
அமெரிக்காவில், நாய்குட்டியை தன்னுடன் விளையாட அனுமதிக்கவில்லை என்பதற்காக, 8 வயது சிறுமியை 11 வயது சிறுவன் சுட்டிகொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அமெரிக்காவில் வசித்து வருபவர் லடாசா டயர். இவரின் செல்ல மகள் மெகய்லா(8). இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த சிறுமி சனிக்கிழமை அன்று, இவர்கள் வீட்டின் அருகே வசித்துவரும் 11 வயது சிறுவனுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
 
அந்த சிறுவன், அதே பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து  வருகிறான். மெகய்லா வீட்டில் ஒரு குட்டி நாய் இருக்கிறது. அந்த சிறுவன், மெகய்லாவிடம் அந்த நாயைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறான். அதற்கு அந்த சிறுமி மறுத்துவிட்டாள்.
 
இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் நேராக அவனின் விட்டிற்குச் சென்று அவனின் தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து வந்து அந்தச் சிறுமியை சுட்டுவிட்டான். சம்பவ இடத்திலியே அந்தச் சிறுமி பலியானாள். சிறுவனின் இச்செயலைக் கண்டு அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 
 
காவல்துறைக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறை அந்த சிறுவனை கைது செய்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்