அமெரிக்காவிலிருந்து டொமினிக்கன் குடியரசுக்குச் சென்ற விமானம் கனா நகரிலுள்ள விமான நிலையத்தை நெருங்கிய போது அமெரிக்க ஆண் ஒருவர் திடீரென ‘எனக்கு எபோலா நோய் இருக்கிறது’ என்று கூச்சலிட்டார். இதனால் விமான பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது.