நேபாள நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2400 ஐ தாண்டியது

திங்கள், 27 ஏப்ரல் 2015 (07:12 IST)
நேபாளத்தில் ஏற்பட்ட  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2400 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும், கட்டட இடிபாடுகளில் மேலும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. 


 
நேபாள நாட்டின் மையப்பகுதியில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் சனிக்கிழமை நண்பகல் 11.46 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர், சிறிய அளவிலான கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 16 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.
 
இந்த நிலநடுக்கத்தால் நேபாளம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்துக்கு 2400 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்புபப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில் அங்கு நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்