குயின்ஸ்லாந்தின் சன்ஷைன், கோல்டு ஆகிய கடற்கரை பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆஸ்திரேலியாவின் புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நிலநடுக்கத்தினால் சுனாமி அபாய எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.