துபாய் விமான நிலையம் உலக சாதனை; 78 மில்லியன் பயணிகளை ஏற்றி சாதனை

புதன், 3 பிப்ரவரி 2016 (15:43 IST)
உலகிலேயே அதிக பயணிகள் பயணம் மேற்கொண்ட விமான நிலையம் என்ற பெயரை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக துபாய் விமான நிலையம் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
 

 
கடந்த 2015ஆம் ஆண்டு மட்டும் 78 மில்லியன் அதாவது 7 கோடியே 80 லட்சம் பயணிகள் துபாய் விமான நிலையத்தை பயண்படுத்தி உள்ளனர்.

அதேபோல கடந்த 2014ஆம் ஆண்டும் 70.4 மில்லியன் பயணிகள் துபாய் விமான நிலையம் வழியாக வந்து சென்றுள்ளனர். 2014ஆம் ஆண்டை விட 10.7 சதவீதம் பயணிகள் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
 
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமான சேவை நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன. இதன் மூலம் 240 சர்வதேச பன்னாட்டு முனையங்களுக்கு வான் போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்