தெற்கு சீனாவைத் தாக்கிய 6.5 ரிக்டர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 398 ஆக அதிகரித்து இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லுதியன் பகுதியில் 12,000க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர், நான் சடலங்கள் துணிகளில் சுத்தப்பட்டு எடுத்து செல்லப்பட்டதைக் கண்டேன். சில சடலங்கள் சிறிய துணிகளில் சுத்தப்பட்டு இருந்தது, அவை சிறுவர்களின் சடலமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.