ஆனால், தாவூத் இப்ராகிம் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து உள்ளது. லக்னோவில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம், தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அப்துல் பாசித், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் குற்றச்சாட்டை மறுத்தார். அவர் கூறுகையில், இந்த கேள்விக்கு என்னால் ஒன்றை மட்டுமே பதிலாக சொல்ல இயலும். அந்த ஜென்டில்மேன் எங்கள் நாட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.