தாயின் அழுகிய பிணத்துடன் 5 ஆண்டுகள் வாழ்ந்த மகள்

புதன், 19 நவம்பர் 2014 (16:09 IST)
ஜெர்மனியில் இறந்த தாயின் உடலுடன் 5 வருடங்கள் வாழ்ந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஜெர்மனியில் கடந்த 2009 இல் இறந்த தாயின் உடலுடன் 55 வயது பெண் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பல நாட்களாகியும் இவரது தாய் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அருகிலுள்ள வீட்டிகளில் வசிப்பவர்கள், அவரது தாயை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் வலுக்கட்டாயமாக வீட்டினுள் புகுந்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 
வீட்டினுள் அழுகிய நிலையில் எழும்புகளுடன் கூடிய உடலினை பார்த்த் அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், மூதாட்டியின் மகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்