கொரோனா அச்சத்தால் COCO COLA விற்பனை வீழ்ச்சி

புதன், 22 ஜூலை 2020 (16:19 IST)
சீனாவில் இருந்து உலமம் முழுவதும் பரவிவரும் கொரொனா வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1,51,11,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 11,92, 915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1,80,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுக்கக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  கொரோனவுக்கு அதிக மக்கள் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தக் கொரோனா காலத்தில்  இந்தியா மற்றும்  ஐரோப்பியா நாடுகளில் மிகப்பிரபலமான குளிர்பானமான கொகோகோலா நிறுவனத்தின் குளிர்பானங்களின் விற்பனை என்பது 16% அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஓவ்வொரு கோடை காலத்தில்  அந்நிறுவனத்தின் விற்பனை ரூ 20 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆகும் நிலையில் இந்தக் கொரொனா காலத்தில் மக்கள் அச்சத்தின் பொருட்டு குளர்பானங்கள் அதிகம் விற்பனை ஆகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
c

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்