இது குறித்து ரகுராம் ராஜன் `சீனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், சீனாவில் ஏற்பட்டுள்ள மந்த நிலை என்பது ஒட்டுமொத்த உலகத்துக்கும் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செல்லும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படக்கூடும்.
சீனா தனது நாணய மதிப்பை குறைத்தது பற்றிய கேள்விக்கு, ”சர்வதேச செலாவணி மையம் சீனாவிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை. ஆனால் முக்கியமான நாடுகளின் நாணயங்கள் சர்வதேச வர்த்தகத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று ஐஎம்எப் எதிர்பார்க்கிறது. அதை நோக்கி சீனா நகர்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.