பிரதமர் மோடியை சந்திக்கிறார் இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (00:10 IST)
பிரதமர் நரேந்திரமோடியை, சந்திக்க இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, டெல்லியில் சந்திக்க உள்ளார்.
 

 
இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமார துங்க, பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் சந்திக்க உள்ளார். டெல்லியில் அனைத்துலக இந்து - பௌத்த மாநாடு தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர்  மோடி தொடங்கிவைக்க உள்ளார்.
 
இந்த மாநாட்டில், இலங்கை, தாய்லாந்து, ஜப்பான், மங்கோலியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
 
இந்த மாட்டில், இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமார துங்க கலந்து கொள்கிறார். அந்த காலகட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் கூறுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்