மனிதனின் மரணத்தைக் கணிக்கிறதாம் அதிசய அமெரிக்கப் பூனை

திங்கள், 24 நவம்பர் 2014 (15:30 IST)
அமெரிக்காவில் உள்ள பூனை ஒன்று மனிதனின் மரணத்தை கணித்து சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் ரோட் தீவில் வசிக்கும் மருத்துவர் ஒருவர், கடந்த 7 ஆண்டுகளாக பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த பூனை மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளின் அறைகளுக்குச் சென்று ஒரு சுற்று சுற்றுகிறதாம். பிறகு, அந்த நோயாளியின் அருகில் போய் நின்று விடுகிறதாம். அந்த பூனை சென்று சில மணி நேரத்தில் அந்த நோயாளி மரணத்தைச் சந்தித்து விடுகின்றனராம்.
 
அவரது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் மரணத்தை முன்கூட்டியே அறிந்து சொல்லும் அபூர்வ சக்தியை கொண்டுள்ளதாக டாக்டர் டேவிட் கூறியுள்ளார். மேலும் அந்த பூனையைப் பற்றி டேவிட், புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்