’தமிழர்கள் மகிழ்ச்சி’ - ஜனவரி மாதம் தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவிப்பு!

வெள்ளி, 7 அக்டோபர் 2016 (01:46 IST)
கனடா அரசு ஜனவரி மாதத்தை தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளது.


 
 
1950-களில் தமிழர்கள் முதன் முறையாக கனடாவில் குடியேறினார்கள். அதுமுதற்கொண்டு கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களும் தங்களது பங்களிப்பை பெருமளவில் அளித்து வந்திருக்கின்றனர். அந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கனடா அரசு தமிழுக்கு இந்த கெளவரவத்தை அளித்திருக்கிறது.
 
இந்த அறிவிப்பின் மூலம் கனடா குடிமக்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் தமிழர்களின் கலை,பண்பாடு ஆகியற்றை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்