நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி

செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (17:33 IST)
அமெரிக்காவில் வானில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கலிபோர்னியாவில் இருந்து சிகாகோ–சர்கரமென்டோவிற்கு  பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 134 பயணிகளும், 5 விமான ஊழியர்களும இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென எழுந்த ஒரு பயணி கழிவறைக்கு சென்றுவிட்டு, தண்ணீரை தலையில் ஊற்றிக்கொண்டு வெளியே வந்து விமானத்தின் பின்பக்கத்தில் இருந்த கதவை திறக்க முயன்றார். 
 
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் அவரை  தடுத்தனர். அதை தொடர்ந்து ஓமேகா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
 
பின்னர் அந்த பயணி அங்கு விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விசாரிக்கப்பட்டார். அந்த பயணி கதவை திறக்க முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதால்  பெரும் விபத்து தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்