ஹென்றி சாவ் (31) என்ற வாலிபர், ஹாங்காங்கில் வசித்து வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு ஹென்றி சாவி-இன் பெற்றோர்கள் திடீரென காணாமல் போயுள்ளனர். சில நாட்கள் கழித்து, அவர்களது துண்டிக்கப்பட்ட தலைகள் மட்டும், வீட்டின் குளிர்பதனப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டன.
அப்போது ஹென்றி சாவ்விடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளானர். விசாரணையில், தன்னுடைய பெற்றோர்களையே கொன்று சமைத்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர் இருவரையும் கொன்று விட்டு, பிறகு, உடல் உறுப்புகள் மீது உப்பு தடவி சமைத்துள்ளார்.